Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொங்கல் கூட்டம் தவிர்க்க சிறப்பு பஸ்கள் தயார்: நிம்மதியாக வீட்டிற்கு செல்ல உரிய நடவடிக்கை

ஜனவரி 10, 2020 07:53

புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோண கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது்-

வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சியில் இருந்து தஞ்சாவூர்  
கும்பகோணம்  திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மதுரை ஆகிய இடங்களுக்கும்  மதுரை  கோயம்புத்தூர்இ திருப்பூர் ஊர்களில் இருந்து திருச்சி  
தஞ்சாவூர்  புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 12-ந்
தேதி முதல் 14-ந் தேதி வரையிலும் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும்  கும்பகோணம்  தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பேராவூரணிஇ மன்னார்குடி நன்னிலம்  திருவையாறு தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர்
அண்ணா பஸ் நிலையத்தில் இருந்தும். கரூர்  திருச்சி  அரியலூர் செந்துறை  ஜெயங்கொண்டம் புதுக்கோட்டை அறந்தாங்கி  ராமநாதபுரம் ராமேஸ்வரம்
பரமக்குடி  மதுரை  கமுதி  முதுகுளத்தூர் நாகப்பட்டினம்  வேளாங்கண்ணி மயிலாடுதுறை  சீர்காழி திருவாரூர் திருத்துறைப்பூண்டி  வேதாரண்யம் தட பஸ்கள்
கோயம்பேடு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. 

பொங்கல் பண்டிகை முடிந்து திரும்ப செல்ல 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கும்பகோண கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்